சென்னை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 30ம் தேதி மற்றும் 1ம் தேதி ஆகிய நாட்கள் திருச்சியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ஆய்வுக் கூட்டம் வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும். அனைத்து அலுவலர்களும் தங்களது அலகிற்குட்பட்ட கூட்டப் பொருட்களின் விவரங்களை தயாரித்து இணை இயக்குநருக்கு ஜெராக்ஸ் காபியை வழங்கவும்.