சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: ‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல்-பண்பாட்டின் குறியீடு-உரிமைப்போரின் முன்னோடி-தமிழ்நாட்டின் அடையாளம்-திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி-சுயமரியாதை-மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடத்தை மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரைவிளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.