அங்கித் திவாரி காவல் நீட்டிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறையில் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நீதிபதி மோகனா 3வது முறையாக வருகின்ற 24 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்