அஞ்சுகிராமம் அருகே மழையால் சேதம் அடைந்த வாழைகளுக்கு நிவாரணம்

*விவசாயிகள் கோரிக்கை

அஞ்சுகிராமம் : அஞ்சுகிராமத்தை அடுத்த பொட்டல்குளத்தை சேர்ந்தவர் வில்சன் (49). விவசாயி. இவர் பொட்டல்குளம் மேற்கு பகுதியில் மருந்துவாழ்மலை பிரதான கால்வாய் கிழக்குப்பிரிவு பகுதியில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் 2,500 வாழைகள் பயிரிட்டுள்ளார். ஒரு வாழைக்கு சுமார் ₹100 வீதம் செலவு செய்துள்ளார்.

வாழைகள் குலை தள்ளி இன்னும் ஒரு மாதத்தில் பலனடையும் தருவாயில் காணப்பட்டன. ஆனால் சமீபத்தில் வீசிய மிக்ஜாம் புயல் மழையால் 1,500 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயி வில்சனுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு