திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற 16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16 அடி விஸ்வரூபம் வைராக்கிய ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிங்காரவேலு, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.