16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற 16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16 அடி விஸ்வரூபம் வைராக்கிய ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிங்காரவேலு, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி