திருமலை: ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி 9, 16ம் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனிவார ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி 9 ம் தேதி கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை.
மேலும் 9ம் தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 16 ம் தேதி இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யபட்டுள்ளது.
ஆனிவார ஆஸ்தானம் திருப்பதியில் 9, 16ல் விஐபி தரிசனம் ரத்து
previous post