சென்னை: கால்நடை பண்ணை அமைப்பவர்களை தேர்வு செய்து கடன் உதவி அளிக்க முடிவு செய்து உள்ளோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக 10,000 கால்நடை பண்ணைகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்கவும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆவின் மட்டுமே ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான கொள்முதல் விலை வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.