மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவரை சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற அங்கித் திவாரி சிறையில் உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.