மதுரை: அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வானை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். கிராம சுகாதார செவிலியர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய அரசாணைக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.