ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். கனமழையால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது.