அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். ஆளுநர் அப்துல் நசீர், சந்திரபாபு நாயுடுக்கு பதவி பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சந்திரபாபு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.