ஆந்திராவில் 2 முறை நில அதிர்வு

திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை சுமார் 3.40 மணியளவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டதாம். அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து சிதறியது. சத்தம் கேட்டு வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து எழுந்தனர். பின்னர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தனர். நில அதிர்வினால் சில வீடுகளில் கட்டிலில் இருந்தவர்கள் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4.03 மணியளவில் மீண்டும் 2வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் செல்லாமல் விடிய விடிய வீதியிலேயே காத்துக்கிடந்தனர். தொடர்ந்து நில அதிர்வு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது