அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் தற்போது கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிதி உதவி வழங்கியுள்ளார். அவர் சுமார் ஒரு கோடி ரூபாயை நிவாரண பணிகளுக்காக கொடுத்துள்ளார். இரு மாநிலங்களுக்கும் தலா 50 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் ஜூனியர் என்டிஆர் கொடுத்துள்ளார்.