இந்த சம்பவத்தில் அதிரடிப்படை போலீஸ்காரர் கணேஷ்(30) பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிரடிப்படை போலீசார், அந்த காரை விரட்டிச்சென்றனர். இதனால் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த 3 பேர் தப்பியோடினர்.
காரில் பதுக்கி கடத்திய செம்மரக்கட்டைகள் மீது அமர்ந்து சென்ற 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றிவளைத்தனர். பின்னர் அதில் இருந்த 2 பேரை கைது செய்தனர். அந்த காரில் 7 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.