இதில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தனது மனைவி பாரதியுடன் நேரில் பங்கேற்றார். அவர்களை ஒய்எஸ்.சர்மிளா வாசலில் நின்று வரவேற்று அழைத்துசென்றார். பின்னர் ஜெகன்மோகனும் பாரதியும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அங்கிருந்த தனது தாய் விஜயம்மாவை கட்டியணைத்து ஜெகன் சிறிதுநேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ராஜாவின் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் 17ம்தேதி நடைபெறுகிறது. 24ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளது. அண்மையில் காங்கிரசில் இணைந்த சர்மிளாவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை மேலிடம் வழங்கி உள்ளது. நாளை அவர் கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார்.