Saturday, September 28, 2024
Home » ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சர்மிளா மகன் திருமண நிச்சயதார்த்தம்: முதல்வர் ஜெகன்மோகன் நேரில் வாழ்த்து

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சர்மிளா மகன் திருமண நிச்சயதார்த்தம்: முதல்வர் ஜெகன்மோகன் நேரில் வாழ்த்து

by Ranjith

திருமலை: ஐதரபாத்தில் நடந்த சர்மிளா மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்று வாழ்த்தினார்.மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கையுமானவர் ஒய்.எஸ்.சர்மிளா. இவரது மகன் ஒய்.எஸ்.ராஜாவுக்கும் பிரியா என்பவருக்கும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் தனது மனைவி பாரதியுடன் நேரில் பங்கேற்றார். அவர்களை ஒய்எஸ்.சர்மிளா வாசலில் நின்று வரவேற்று அழைத்துசென்றார். பின்னர் ஜெகன்மோகனும் பாரதியும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அங்கிருந்த தனது தாய் விஜயம்மாவை கட்டியணைத்து ஜெகன் சிறிதுநேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ராஜாவின் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் 17ம்தேதி நடைபெறுகிறது. 24ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளது. அண்மையில் காங்கிரசில் இணைந்த சர்மிளாவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை மேலிடம் வழங்கி உள்ளது. நாளை அவர் கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார்.

You may also like

Leave a Comment

17 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi