இந்நிலையில், பொள்ளாச்சியில் இன்று நடந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திர மாநில மாடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. மேலும் சில வாரத்திற்கு பிறகு கேரளா வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. இதனால், கூடுதல் விலைக்கு மாடுகள் விற்பனையானது. இதில் பசு மாடு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், நாட்டு காளை மாடு ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.18 ஆயிரம் வரை என கடந்த மாதத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இன்று மாட்டு சந்தையில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.