திருமலை: ஆந்திராவின் கோதாவரி மற்றும், கடலோர மாவட்டங்களில் சங்கராந்தி(பொங்கல்) பண்டிகை என்றாலே சேவல் பந்தயம் பல கோடி பணம் வைத்து விளையாடப்படும். அம்பேத்கர் கோனலசீமா மாவட்டம், மும்மடிவரம் தொகுதி, கத்ரேனிகோனா மண்டல் கெத்தனப்பள்ளியில் சேவல் பந்தயம் நடக்கிறது. தெண்டுலுரு, அச்சந்தா, பாலகொல்லு, நர்சாபுரம், ஜங்காரெட்டி குடேம். சில இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் முதல் சேவல் பந்தயத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று சேவல் சண்டையை ரசித்து பார்த்தனர்.