ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித் ஷா

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை அமித் ஷா வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்புடன் பேசினார். சமாதானப்படுத்துவது போல் தமிழிசை விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அமித் ஷா கோபத்தை வெளிப்படுத்தினார். மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் அமித் ஷா அதிருப்தி வெளிப்படுத்தியதால் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழ்நாடு பாஜக உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது