அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், கஞ்சாவை பெரிய பொட்டலங்களாக மடித்து பையில் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (48) என்பதும், பழைய பேப்பர், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தி.நகர், கோயம்பேடு, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.