அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
4 லட்சத்து 30 ஆயிரத்து 264 பேர் தெலங்கானாவில் தற்போது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அவர்கள் ஆந்திராவிலும் வாக்குரிமை வைத்துள்ளனர். ஐதராபாத்தில் வாக்குரிமை வைத்துள்ள ஆந்திராவை சேர்ந்தவர்கள் தொடர்பான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
நாட்டில் ஒருவருக்கு ஒரு இடத்தில் வாக்களிப்பதுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் கொள்கை ரீதியான முடிவு. தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதே முதல்வர் ஜெகன்மோகனின் விருப்பம். ஒரு சமூகத்தினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள் இரு மாநிலத்திலும் வாக்களித்து வருகின்றனர். எனவே, அவ்வாறு உள்ளவர்கள் வாக்குகளை ஆந்திராவில் அகற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.