இந்த வாகனத்தில் காக்கிநாடாவில் இருந்து தனது அரசியல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக, குண்டூர் மாவட்டம், மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், பவன் கல்யாண் பங்கேற்று பூஜைகளை மேற்கொண்டார். பவன் கல்யான் பேசுகையில், ‘ஜனசேனா கட்சி எதிர்க்காலத்தில் மிகவும் வலுவான கட்சியாக வளரும். தெலங்கானாவில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தனித்து தேர்தலுக்கு தயாராகுமாறு தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.