ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் லாரி – மினிவேன் மோதி 6 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கன்டெய்னர் லாரியும் மினிவேனும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறால் பண்ணைக்கு தீவனம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியும், கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினிவேனும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மசூலிப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்