இந்நிலையில் ஆட்டோ லாரியை கடக்க முயன்றபோது, எதிரே எர்ரகுண்ட்லாவில் இருந்து வந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் பெண் டிரைவர் உட்பட ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முஹம்மது (25), ஷாகிர் (10), ஹசீனா (25), ஆமினா (20) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த ஜம்மலமடுகு டிஎஸ்பி நாகராஜூ, எர்ரகுண்ட்லா தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.