இந்தநிலையில் ஆந்திர மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது டிவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் ஜெகன் ‘ஆந்திரா மாநிலம் உங்க தாத்தா ராஜா ரெட்டிக்கு சொந்தமானதா? 26 மாவட்டங்களில் 42 ஏக்கருக்கு மேல் 33 வருடங்களுக்கு என பெயரளவுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைக்கு ஒதுக்கியுள்ளீர்கள். மக்களிடம் இருந்து திருடப்பட்ட 500 கோடியில் அரண்மனை கட்டுகிறீர்கள். ₹600 கோடி மதிப்புள்ள நீங்கள் பெற்ற 42 ஏக்கரில் 4,200 ஏழைகளுக்கு ஒரு செண்ட் மனைகள் வழங்கலாம். நீங்கள் மட்டும் உங்கள் நில பேராசையால் உங்களின் ஆடம்பர அரண்மனைகள் கட்ட செலவழித்த ₹500 கோடியில் 25,000 ஏழைகளுக்கு வீடு கட்டித் தரலாம். இந்த அரண்மனைகளின் பைத்தியக்காரத்தனம் என்ன? உங்கள் பணத் தாகத்திற்கு முடிவே இல்லையா? என அமைச்சர் நாரா லோகேஷ் பதிவு செய்துள்ளார்.