இதனிடையே, ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், நூஜிவேடு மண்டலம், தூர்ப்பு திகுபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் ரெட்டி (52). இவர் 7-வது வார்டு உறுப்பினர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியே மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தான் ஆந்திராவில் வெற்றிபெறும் எனவும் வேணுகோபால் ரெட்டி பலரிடம் ரூ. 30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.ஆனால் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, ஜெகன் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, வேணுகோபாலிடம் பணம் கட்டியவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர்.
கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான வேணுகோபால ரெட்டி கிராமத்தை விட்டு வெளியேறினார். செல்போன் செயலிழந்திருந்ததால், ஜூன் 7-ம் தேதி வேணுகோபால் வீட்டுக்குள் சிலர் புகுந்து ஏசி, சோஃபாக்கள், படுக்கைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய வேணுகோபால் வீட்டின் நிலைமை பார்த்துள்ளார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான வேணுகோபால் ரெட்டி, ஊருக்கு ஒதுக்குபுறமாக சென்று, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏலூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.