ஆந்திரா: ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்தது. ஆலையில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாகுளம், பைடிபீமாவரத்தில் உள்ள சரக்கா ரசாயன தொழிற்சாலையில் இன்று மின்உலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தளத்தில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியது, ஆனால் ஊழியர்கள் மதிய உணவிற்கு வெளியே சென்றதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தொழிற்சாலை வளாகத்தில் இருந்த ஏராளமான வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. வெடிச்சத்தமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயும் வீடியோவில் பதிவாகி, சம்பவத்தின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.