மற்றொரு சம்பவம்:
நெல்லூர் வனத்தோப்பு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை காரில் திருப்பதி மாவட்டம் சிலக்கூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரி மீது இவர்களது கார் மோதியது. இதில் கன்டெய்னர் லாரியின் அடியில் கார் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சிலக்கூர் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.