ஸ்ரீ விஜய புரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அதில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது. ஏனெனில் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையில்லாத இடம் உள்ளது. சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக இருந்த தீவுப் பகுதி இப்போது இந்தியாவின் வளர்ச்சி தளமாக மாறி உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போசால் நமது மூவர்ணக்கொடி முதல்முறையாக பறக்க விடப்பட்ட இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராளிகள் சுதந்திர தேசத்திற்காக போராடியபோது சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இடமும் இதுதான் என்றார்.