சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலையால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. இன்று காலை 5:15 மணிக்கு 98 பயணிகளுடன் அந்தமான்சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது, ஆனால் வானிலை சீரடைய வில்லை.