டெல்லி: அந்தமானில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை காணொளியில் பிரதமர் மோடி திறக்கிறார். 2019-ல் ரூ.707 கோடி புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த முனையம் அமைக்க பணிகள் தொடங்கின. 50லட்சம் பயணிகளை கையாளும் வகையிலும் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.