சென்னை: 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும் திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புனரமைக்க 10 கோடி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.