சென்னை: அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. சென்னையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கில் ஜாமின் கோரி மனு அளிக்கப்பட்டது.