சென்னை:உசிலம்பட்டி ஆனையூர் கண்மாயிக்கு ரூ.3.12 கோடியில் புதிய மடை அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அமைச்சர்.துரைமுருகன் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எழுப்பிய கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். புதிய மடை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.