ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு தேங்காய் கொள்முதல்

*விவசாயிகள் ஆர்வம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் மற்றும் பாக்கு கொள்முதல், நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து 19 விவசாயிகள் 58 மூட்டைகளில், உரித்த தேங்காய்களை கொண்டு வந்தனர்.இதில், 1 கிலோ தேங்காய் ரூ.21.75 முதல் அதிகபட்சமாக ரூ.21.50 வரை என சராசரியாக ரூ.21.75க்கு ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த 112 மூட்டைகளில் இருந்த தேங்காய் மொத்தம் ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதனை, 4 வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

அதுபோல, நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பாக்கு ஏலத்தில், விவசாயிகள் 2 மூட்டை பாக்குகளை கொண்டு வந்தனர். இதில் 1 கிலோ சராசரியாக ரூ.350க்கும், காய்ந்த பாக்கு ரூ.170க்கும் என மொத்தம் ரூ.72 ஆயிரத்துக்கு, ஏலம் போனது. இதனை, 2 வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர் என ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!