சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இவ்வாண்டில் 600 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க தாலி, ரூ.50,000 மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 500 திருமணங்கள் நடந்த நிலையில் இவ்வாண்டு 600 திருமணங்கள் திருக்கோயில் சார்பாக நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.