அமுதம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை

சென்னை: தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தொகுப்பில் கடுகு உளுந்து 125 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், மிளகு 50 கிராம், மிளகாய் 250 கிராம், தனியா 500 கிராம், மஞ்சள்தூள் 50 கிராம், புளி 500 கிராம், உப்பு 1 கிலோ, உளுத்தம் பருப்பு 500 கிராம், கடலை பருப்பு 200 கிராம், பாசிப்பருப்பு 200 கிராம், வறுகடலை 200 கிராம், பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகிய பொருட்கள் அந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.

இதே மளிகைப்பொருளை மற்ற கடையில வாங்குனா ரூ.800 வரும்.. ஆனா இப்போ ரூ.500க்கு கிடைக்குறது எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமுதம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு

டாணா புயல் எச்சரிக்கை காரணமாக 28 ரயில் சேவைகளை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து