பட்டாசு தயாரிப்பதற்காக சிவகாசியில் இருந்து வெடிமருந்து பெட்டிகளை பிக்கப் வேனில் டிரைவர் சுரேஷ்குமார் கொண்டு வந்தார். இதனை இறக்கி குடோனில் வைத்தபோது வெடிமருந்து பெட்டி தவறி விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் ஹலோ பிரிக்ஸ் கல்லால் கட்டப்பட்டிருந்த சிறிய குடோனில் இருந்த வெடி மருந்துகளும் வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. இதில் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி ஜெயராமன் பலியானார். முத்துராஜ், டிரைவர் சுரேஷ்குமார் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.