இதையடுத்து, எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று இரவு குடியாத்தம் நகரில் உள்ள பல்வேறு லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குடியாத்தம் பஸ் நிலையம் பின்புறம் அமமுக மாவட்ட செயலாளர் சதீஷுக்கு சொந்தமான லாட்ஜில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, லாட்ஜ் மேலாளர், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். கைதான 6 பெண்களிடம் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி வருகிறார். லாட்ஜ்களில் போலீசார் சோதனை குறித்து தகவலறிந்து மற்ற லாட்ஜ்களில் பாலியல் தொழில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அறைகளை காலி செய்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.