சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார்.உணவின் தரம், அளவு, சுவை குறித்து நேரில் ஆய்வுசெய்தார். ஏழைகள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த வேண்டும். சமையல் கூடம், பரிமாறும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தரம், சுவையுடன் உணவுகளை தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.