அந்த மனுவில், இந்த விதி மீறல் கட்டுமானங்கள் காரணமாக பள்ளி மாணவிகள், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிகையும் எடுக்கப்படவில்லை, என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்னை மிக முக்கியமானது என்பதால் இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.