அவற்றில் 3100 மகளிர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 300 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தினக்கூலியை உயர்த்தி தர கோரி சுமார் 8 ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அண்மையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூபாய் 300-இல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் தொகையாக ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு மூன்று கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.அண்மையில் அம்மா உணவக உட்கட்டமைப்பை மேம்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.