சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 392 அம்மா உணவகங்களில் 3100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினக்கூலி ரூ.300ல் இருந்து ரூ.325ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.