அமித்ஷா மீது அவதூறு; ராகுலுக்கு சம்மன்

சுல்தான்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அவதூறாக சில கருத்துகளை கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் 4ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுல்தான்பூர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ்யாதவ் ராகுல்காந்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார். நேற்று அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 6ம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்