வாஷிங்டன்: அமெரிக்க தமிழர்களின் “விளக்கு” அமைப்பு சார்பில் 2 பேருக்கு-புதுமைப்பித்தன் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவற்ற படைப்புகளுக்காக பொ.வேல்சாமிக்கும், புனைவிலக்கியத்திற்காக சு.தமிழ்ச்செல்விக்கும் விருது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விளக்கு விருது அமைப்பின் தமிழ்நாடு பொறுப்பாளர் அ.வெற்றியேல் அறிவித்துள்ளார்.