அப்போது நெடுஞ்சாலையிலும் கீழேயும் யாரும் பயணிக்காததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. சாலை இடிந்து விழுந்த பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து மீட்புப் படையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.