இதில், ‘‘ராகுல்காந்தி 190கி.மீ தூரம் அமெரிக்க லாரி யாத்திரை மேற்கொண்டார். வாஷிங்டன்னில் இருந்து நியூயார்க் வரை ஓட்டுனர் தல்ஜிந்தர் சிங் விக்கி கில் மற்றும் அவரது உதவியாளர் ரஞ்சித் சிங் பனிப்பால் ஆகியோருடன் பயணித்துள்ளார். இந்த பயணம் இந்திய வம்சாவளி லாரி ஓட்டுனர்களின் அன்றாட வாழ்க்கையை மையமாக கொண்டதாக இருந்தது. அமெரிக்க லாரிகள் ஓட்டுனரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுபோன்று இல்லை. இந்தியாவில் குறைந்த ஊதியம், எப்போதும் இல்லா அளவுக்கு விலை உயர்வு ஆகியவற்றுடன் வாழ்க்கையை சமாளிக்க போராடும் அதே நேரத்தில், அமெரிக்க லாரி ஓட்டுனர்கள் உழைப்புக்கேற்ற கண்ணியமான ஊதியத்தை கவுரத்துடன் பெறுகிறார்கள் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.