சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 9,13535 பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,21,046 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறினார்.