ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுகநாதன். இவரது மனைவி பூர்ணிமா (28). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் துடிதுடித்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது பூர்ணிமாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் லோககுமார் உடனடியாக சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினார். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் அவருக்கு பிரசவம் பார்த்தார்.
இதனை தொடர்ந்து, பூர்ணிமாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வர வேண்டும்: அனைத்து கட்சியினர் மனு

சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம்

பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை