Wednesday, October 2, 2024
Home » ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுகநாதன். இவரது மனைவி பூர்ணிமா (28). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் துடிதுடித்தார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது பூர்ணிமாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் லோககுமார் உடனடியாக சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினார். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் அவருக்கு பிரசவம் பார்த்தார்.
இதனை தொடர்ந்து, பூர்ணிமாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

You may also like

Leave a Comment

eighteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi